மேல உள்ள பேருந்து நிறுத்தங்களில் இந்திய பேருந்து நிறுத்தத்தை தவிர வேறு எதிலும் தண்ணீர் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday 27 April 2010
Monday 19 April 2010
கிழித்தது யார்!
கடைசிப் பக்கம்
கிழிந்த நாவலில்
கொலை செய்தது யார்?
- தனசேகரன்.
கடைசிப் பக்கங்கள்
கிழிந்து போன
துப்பறியும் நவீனத்தை
தெரியாமல் எடுத்துப்
படித்திருக்கிறீர்களா?
அதுதான் வாழ்கை!
- அப்துல் ரகுமான்
கடைசிப் பக்கம்
கிழிந்த நாவலுக்கு
ஒருவர் மட்டுமா ஆசிரியர்!
- செல்வேந்திரன்
இப்படி கடைசிப் பக்கம் மட்டும் கிழித்தவர்களில் யார் முதலில் இந்த கடைசிப் பக்கத்தை கிழித்தது என்பது கிழித்தவருக்கு தான் வெளிச்சம்.
Thursday 1 April 2010
ரசித்தவை
வலி
விழுங்கிய மீன்தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்...
**********************
குழந்தை
குழந்தை
மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு!
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு!
*********************
தோற்ற மயக்கம்
தோற்ற மயக்கம்
துல்லிய நீர்பரப்பில்
துறவிபோல் வந்தமர்ந்து
மெல்லிய தன் உடலை
மேற்பரப்பில் பிரதியாக்கி
தண்ணீரில் தவம் செய்யும்
பார்ப்பதற்கு பரவசம் தான்
மீனுக்குத் தானே தெரியும்
கொக்கின் குரூரம்.
துறவிபோல் வந்தமர்ந்து
மெல்லிய தன் உடலை
மேற்பரப்பில் பிரதியாக்கி
தண்ணீரில் தவம் செய்யும்
பார்ப்பதற்கு பரவசம் தான்
மீனுக்குத் தானே தெரியும்
கொக்கின் குரூரம்.
********************
சாமக்கொடை
சாமக்கொடை
பதினெட்டு பட்டி சூழ
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரியவீட்டு சாந்தி மீது
"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்.
ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படி சொல்லுவேன்
நீதான் வேண்டுமென்று.
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரியவீட்டு சாந்தி மீது
"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்.
ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படி சொல்லுவேன்
நீதான் வேண்டுமென்று.
Subscribe to:
Posts (Atom)