வலி
விழுங்கிய மீன்தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்...
**********************
குழந்தை
குழந்தை
மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு!
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு!
*********************
தோற்ற மயக்கம்
தோற்ற மயக்கம்
துல்லிய நீர்பரப்பில்
துறவிபோல் வந்தமர்ந்து
மெல்லிய தன் உடலை
மேற்பரப்பில் பிரதியாக்கி
தண்ணீரில் தவம் செய்யும்
பார்ப்பதற்கு பரவசம் தான்
மீனுக்குத் தானே தெரியும்
கொக்கின் குரூரம்.
துறவிபோல் வந்தமர்ந்து
மெல்லிய தன் உடலை
மேற்பரப்பில் பிரதியாக்கி
தண்ணீரில் தவம் செய்யும்
பார்ப்பதற்கு பரவசம் தான்
மீனுக்குத் தானே தெரியும்
கொக்கின் குரூரம்.
********************
சாமக்கொடை
சாமக்கொடை
பதினெட்டு பட்டி சூழ
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரியவீட்டு சாந்தி மீது
"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்.
ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படி சொல்லுவேன்
நீதான் வேண்டுமென்று.
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரியவீட்டு சாந்தி மீது
"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்.
ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படி சொல்லுவேன்
நீதான் வேண்டுமென்று.
No comments:
Post a Comment