Monday 19 April 2010

கிழித்தது யார்!


கடைசிப் பக்கம்
கிழிந்த நாவலில்
கொலை செய்தது யார்?

- தனசேகரன்.

கடைசிப் பக்கங்கள்
கிழிந்து போன
துப்பறியும் நவீனத்தை
தெரியாமல் எடுத்துப்
படித்திருக்கிறீர்களா?
அதுதான் வாழ்கை!

- அப்துல் ரகுமான்


கடைசிப் பக்கம்
கிழிந்த நாவலுக்கு
ஒருவர் மட்டுமா ஆசிரியர்!

- செல்வேந்திரன்


இப்படி கடைசிப் பக்கம் மட்டும் கிழித்தவர்களில் யார் முதலில் இந்த கடைசிப் பக்கத்தை கிழித்தது என்பது கிழித்தவருக்கு தான் வெளிச்சம்.

1 comment: