கிழிந்து ஆடியது
கண்டபடி
வாழையிலையின் நிழல்.
முழுநிலவின் ஓருபாதி
குங்கும மாடத்தின்
மீதெழுந்தது.
நீல வான்
மீது கிளம்பிய
காற்று வீசியது.
முத்துச்சரம் போல
பாடல் ஒன்றும்.
ஆனால்,
பாடகி தெரியவில்லை.
அவள் முகம்
அழகிய வேலைப்பாடுடனான
திரைச் சீலை மறைவில்.
ஸன் தாவ் ஹ்சுவான்
(காலம்: 12ஆம் நூற்றாண்டு)
தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து
ReplyDelete